Tuesday, July 20, 2010

முன்னோர் கரம் பற்றி...

எந்த ஒன்று மன எழுச்சியையும், விடுதலையையும் நோக்கிச் சுக்கல் சுக்கலாக உடையவில்லையோ? பொடிப் பொடியாகவில்லையோ? அந்த ஒன்று எங்ஙனம் வாழ்ந்து வானோக்கி உயர முடியும்?

ஏனெனில் நாம் எப்பொழுதும் இன்னிசை பாடவும், நாம் பாடியதனை கேட்கவும், கரையைத் தேடும் முனைப்பிலிருந்தோம். ஆனால் எந்தக் காதும் கேட்காத இடத்திலே தன்னை உடைத்துக்கொண்டு ஓலமிடும் கடலலையை என்னென்பது?

நம்முள் நிலவும் கேட்கப்படாத ஒன்றுதான் நம்முடைய அழ்ந்த துயரத்திற்குத் தாதியாகிப் பேணிக்காக்கின்றது. அம்மட்டோ அந்தக் கேட்கப்படாத ஒன்றுதான் நம் ஆத்மாவின் உருவத்தைச் செதுக்கி, நம்முடைய விதியினையும் நிர்மாணிக்கின்றது.

என்னுடைய ஏக்கத்தினை விண்மீனாம் அளவுகோலால் நான் அளந்தறியவில்லை. அதனின் ஆழத்தையும் நான் கணக்கிடவில்லை. ஏனெனில் அன்பு, தான் பிறந்த மண் மீது ஏக்கங்கொண்டால், அந்த அன்பே காலத்தின் அளவுகோலையும் அதன் ஆழத்தையும் வற்றடித்துவிடுகின்றது. ( These are lines of Galeel gybran)

No comments:

Post a Comment